search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை புலி"

    • வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
    • தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி, புலிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. சிலோன் காலனி பகுதியில் புலியின் அட்டகாசம் காரணமாக பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கீரிப் பாறை வனப்பகுதியில் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி சுற்றி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் குமரி மேற்கு மாவட்டம் மோதிர மலை பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளி ஒரு வரை சிறுத்தை புலி தாக்கி உள்ளது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குலசேகரம் அருகே உள்ள மோதிரமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). ரப்பர் பால்வெட் டும் தொழிலாளி. இவர் தினமும் காலை அவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையில் வழக்கம்போல் சிவக்குமார் அவரது ரப்பர் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதி யில் திடீரென வந்த சிறுத்தை புலி சிவகுமாரை தாக்கியது. இதனால் சிவகுமார் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. சிறுத்தை புலி தாக்கப்பட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சிவகுமாரை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் கிடந்ததையடுத்து ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. சிவக்குமாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரப்பர் தோட்ட தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய தகவல் வனத்துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சிறுத்தை புலியின் கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிவகுமாரிடம் நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்தனர். தொழிலாளியை சிறுத்தை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுத்தை புலி மற்றொரு பகுதியில் புகுந்திருப்பது குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
    • 2 வாத்து கோழிகளையும் சிறுத்தை கடித்துள்ளது. மற்றொரு வீட்டில் ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சிற்றாறு பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் அது இன்று வரை சிக்கவில்லை. அதே நேரம் இடத்தை மாற்றி மாற்றி புலி, மாடு, ஆடு போன்றவற்றை இரையாக்கி வருகிறது. இந்த பீதியே இன்னும் அடங்காத நிலையில், சிறுத்தை புலி மற்றொரு பகுதியில் புகுந்திருப்பது குமரி மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் உள்ளது. இந்த வீடுகளில் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். இதில் உதயன் என்பவரது வீட்டில் தான் சிறுத்தை புலி கைவரிசை காட்டியுள்ளது.

    அவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை புலி கடித்து தின்று கொண்டிருந்தது. சத்தம் கேட்டு வீட்டின் பின்புறம் வந்த உதயன், இதனை பார்த்ததும் சத்தம் போட்டு பட்டாசுகளை வெடித்தார். இதனை தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்டது.

    அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரது வீட்டில் பின்னால் இரும்பு கூட்டில் அடைக்கப்பட்டிருந்த 2 வாத்து கோழிகளையும் சிறுத்தை கடித்துள்ளது. மற்றொரு வீட்டில் ஆட்டை கடித்துக் கொன்றுள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுத்தை புலி நடமாட்டம் அந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள், பால் வெட்டும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சிறுத்தை நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
    • வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை புலியின் படம் பதிவாகி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சூரியாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை, பரமத்திவேலூர் கொங்கு பள்ளி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள், கன்று குட்டிகள், வளர்ப்பு நாய்கள் மற்றும் மயில்கள், கோழிகளை கடந்த மாதம் 31-ந் தேதியிலிருந்து தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக சிறுத்தை புலி வேட்டையாடி வருகிறது.

    இதையடுத்து, மாவட்ட வனசரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில நேரத்தில் ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். முதுமலை, தேனி மற்றும் கோவை பகுதியில் இருந்து வந்துள்ள வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    செஞ்சுடையாம்பாளையம் அருகே உள்ள புலிகரடு, அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள குவாரியின் அடர்ந்த பகுதியில் சிறுத்தை புலி பதுங்கி இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. சிறுத்தை புலி பகல் நேரங்களில் வெளியில் வருவதில்லை. இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து தனக்கு தேவையான இரையை தேடி செல்கிறது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு புளியம்பட்டி, ரங்கநாதபுரம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்த கன்று குட்டியை சிறுத்தை புலி அடித்து கொன்று சாப்பிட்டு விட்டு, மீதியை செடி கொடிகளை போட்டு மூடி வைத்து விட்டு சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதிக்குச் சென்ற சிறுத்தை புலி சண்முகம் என்பவரது தோட்டப் பகுதியில் ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று, கொன்று சாப்பிட்டு போட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதனிடையே பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்னால், வில்லிபாளையம் பகுதியில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேற்று மதியம் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை புலியின் கால் தடம் உள்ளதா என்று ஆய்வு நடத்தினர்.

    இதனிடையே வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை புலியின் படம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • வெள்ளாளபாளையம், சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கன்றுக்குட்டி, ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • சிறுத்தை புலியை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சூர்யாம்பாளையம், வெள்ளாளபாளையம், சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கன்றுக்குட்டி, ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த சிறுத்தை புலிைய பிடிக்க நாமக்கல் வன சரக அலுவலர் பெருமாள் தலைமையில் கண்காணிப்பு கேமிரா மற்றும் டிரோன் கேமிரா மூலமும், கூண்டு அமைத்தும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புலி நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மின் கம்பங்களும் உயர் அழுத்த மின் வயர்களும் செல்வதால் இரவு நேரத்தில் ட்ரோன் கேமிராவை பறக்க விடுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேர டிரோன் கேமரா பறக்க விடுவதில் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை புலி உருவம் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தனது வீட்டின் அருகே மாடு மற்றும் கன்று குட்டிகளை கட்டி வைத்திருந்தார்.நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை புலி பொன்னுசாமி வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த கன்று குட்டியை விட்டுவிட்டு திடீரென மாட்டின் மீது ஏறி மாட்டை கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் மாடு சத்தம் போடவே வீட்டுக்குள் இருந்தவர்கள் ஓடிவந்து சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்ட சிறுத்தை புலி அங்கிருந்து ஓடி விட்டது.

    பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை புலி இன்று அதிகாலை அங்கு கட்டி வைத்திருந்த ஆடுகளில் 3 ஆடுகளை தின்றுவிட்டு ஒரு ஆட்டை கடித்து இழுத்து சென்று விட்டது.

    இது குறித்து அந்த விவசாயி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி அந்த பகுதியில் அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

    அதன் அடிப்படையில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு சிறுத்தை புலியை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களுடன் சிறுத்தை புலிக்கு மயக்க மருந்து செலுத்தும் 2 கால்நடை டாக்டர்களும் உள்ளனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள வல்லுனர்களும், முதுமலை பகுதியில் இருந்து ட்ராக்கர்ஸ் எனப்படும் புலிகளின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வல்லுனர்களும், சிறப்பு பயிற்சி பெற்ற வனக்காவலர்களும் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் இப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.

    • கன்று குட்டியை தாக்கி கொன்று 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது சிறுத்தை புலி தான் என கண்டுபிடிக்கப்பட்டது.
    • கன்றுக்குட்டி இறந்து கிடக்கும் இடத்திற்கு மனிதர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே புளியம்பட்டி ரங்கநாதபுரம் தேட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்( வயது 52). இவருக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இவரது தோட்டத்தில் உள்ள தொழுவத்தில் 5 மாடுகள், 6 கன்று குட்டிகளை வளர்த்து வருகிறார்.

    தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் இவர் மட்டும் இரவு மாடுகளுக்கு பாதுகாப்பாக தங்குவது வழக்கம். இந்நிலையில் காலை மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக சென்று பார்த்தபோது, அங்கு கட்டி இருந்த ஒரு கன்று குட்டியை காணவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் தேடிய போது, அவரது தோட்டத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில், கன்று குட்டி இறந்து கிடந்தது.

    இதைப் பார்த்த சீனிவாசன் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனவர் சீனிவாசன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கன்று குட்டியை தாக்கி கொன்று 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது சிறுத்தை புலி தான் என கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சிறுத்தை புலி அந்த கன்று குட்டியை சிறிதளவு சாப்பிட்டுவிட்டு செடி, கொடிகளை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளது.

    எனவே சிறுத்தை புலி மீண்டும் தனது இரையை எடுக்க அந்த பகுதிக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாக கருதிய வனத்துறையினர், கன்றுக்குட்டி இறந்து கிடக்கும் இடத்திற்கு மனிதர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இறந்து கிடக்கும் கன்றுக்குட்டி மீது மனித வாடை அடிக்கும்பட்சத்தில், சிறுத்தை புலி திரும்ப அந்த இடத்திற்கு வராது.

    இதனால் கன்றுக்குட்டி அருகே யாரும் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. சிறுத்தை புலியை பிடிப்பதற்காக, உடனடியாக கூண்டு வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் வைத்துள்ளனர்.

    மேலும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளுக்கு சிறுத்தை புலி தண்ணீர் குடிப்பதற்கு கண்டிப்பாக வரும் என்பதால் அந்தப் பகுதிகளின் அருகே புதிதாக கேமிராக்கள் அமைக்க உள்ளனர்.

    ×